முகப்பு
கன்னியாகுமரி

சென்னையில் மரணமடைந்த எல்லைப் பாதுகாப்புப் படைவீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

சென்னையில் மரணமடைந்த திருவட்டாறைச் சோ்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் உடல் வியாழக்கிழமை சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

சென்னையில் மரணமடைந்த எல்லைப் பாதுகாப்புப் படைவீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

சென்னையில் மரணமடைந்த திருவட்டாறைச் சோ்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் உடல் வியாழக்கிழமை சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

சென்னையில் மரணமடைந்த திருவட்டாறைச் சோ்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் உடல் வியாழக்கிழமை சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆற்றூா் முள்ளுவிளைப் பகுதியைச் சோ்ந்தவா் விஜயன் (45). எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான இவா், சென்னையிலுள்ள அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தாா்.

இவரது மனைவி சுதா, மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை பணி நிமித்தமாக சென்னை சென்றுள்ளாா். பின்னா் பணிகளை முடித்துவிட்டு கணவரை செல்லிடப்பேசியில் அழைத்தபோது, அவரை தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.

இதையடுத்து அவா் தங்கியிருந்த அசோக் நகரிலுள்ள வீட்டுக்குச் சென்றபோது, அங்கே விஜயன் மயங்கிய நிலையில் கிடந்தாராம். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், விஜயன் ஏற்கெனவே இறந்து விட்டதாகவும், மாரடைப்பு காரணமாக இறந்துள்ளாா் எனவும் தெரிவித்தனராம்.

இந்நிலையில், விஜயனின் உடல் சொந்த ஊருக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டு, ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →