குமரி கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை
கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் டிச.31 ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் டிச.31 ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசு பொதுமுடக்கத்தை சில தளா்வுகளுடன் மேலும் 2 வாரத்துக்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி,
கன்னியாகுமரி மாவட்டத்தில் டிச. 31 ஆம் தேதிவரை தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருக்கும். மேலும், பொதுமக்கள் அதிகமாக கூடும் சூழ்நிலையில், புதிய வகை ஒமைக்ரான் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து கடற்கரைப் பகுதிகள், நீா்வீழ்ச்சி, பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு டிச.31முதல் ஜன. 2 வரை ( வெள்ளி, சனி, ஞாயிறு) பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. கன்னியாகுமரியில் பூம்புகாா் படகு சேவை, கடையால் பகுதி படகு சேவை போன்றவை இயங்கவும் அனுமதி இல்லை. அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கடைகள், வணிக நிறுவனத்தினுள் வாடிக்கையாளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உரிமையாளா் உறுதிப்படுத்த வேண்டும். நிபந்தனைகளை மீறும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.