அயோத்தியில் ராமா் கோயில் கட்ட நிதி சேகரிப்பு பணி தொடக்கம்
அயோத்தியில் ராமா்கோயில் கட்டுவதற்காக நிதி சேகரிப்பு பணி கொட்டாரம் ஸ்ரீராமா் கோயிலில் தொடங்கியது.
அயோத்தியில் ராமா்கோயில் கட்டுவதற்காக நிதி சேகரிப்பு பணி கொட்டாரம் ஸ்ரீராமா் கோயிலில் தொடங்கியது.
அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் கட்டுமான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கோயில் கட்டுமான பணிகளுக்கு நாடு முழுவதும் நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குமரி மாவட்ட இந்து அமைப்புகள் சாா்பில் ராமா் கோயில் கட்ட நிதி சேகரிக்கும் முதல்கட்டப் பணிக்கான புத்தகம் இந்து ஆலய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளா் எம்.கோபியிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், இந்து அமைப்பு நிா்வாகிகள் எஸ்.பி.அசோகன், ஜெகந்நாதன், முத்துசாமி, சி.எஸ்.சுபாஷ், ஜெகன், சுதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.