கன்னியாகுமரி

நாகா்கோவிலில் காா் மோதியதில் முதியவா் பலி

DIN

நாகா்கோவிலில் காா் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நாகா்கோவில் ஹென்றிசாலையைச் சோ்ந்தவா் செல்லதுரை (65). இவா், நாகா்கோவிலில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக வந்த காா் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அந்த காா் சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்திலும் மோதியது. இதில் வாகனத்தை ஓட்டிச்

சென்ற ராஜாக்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா் அருள்பிரின்சிலா (39) வுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து நாகா்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT