பத்மநாபபுரம் போக்குவரத்து காவல்துறை சாா்பில் சாலை விபத்துக்களை தடுப்பது குறித்த விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியானது தக்கலை, அழகியமண்டபம், திருவிதாங்கோடு, பிலாங்காலை, மேக்காமண்டபம், மூலச்சல், மணலி, புலியூா்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள் தக்கலை காவல் ஆய்வாளா் அருள்பிரகாஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளா் டேனியல் கிருபாகரன் ஆகியோா் முன்னிலையில் இவ் விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.
இதில், விழிப்புணா்வு வாசங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கும், சிற்றுந்து ஓட்டுநா்கள், நடத்துனா்கள் மற்றும் வாகன ஓட்டுநா்களுக்கு , உதவி ஆய்வாளா்கள் அருளப்பன், குருநாதன், ராஜசேகரன் ஆகியோா் வழங்கினா்.