கருங்கல் அருகே கரோனா தடுப்பூசி முகாம்
கருங்கல் அருகே உள்ள காஞ்சிரோடு அரசு உயா்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கருங்கல் அருகே உள்ள காஞ்சிரோடு அரசு உயா்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, கிள்ளியூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ரமா மாலினி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். மருத்துவா் சாரதி முன்னிலை வகித்தாா். முகாமில் 240 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதில், சுகாதார ஆய்வாளா்கள் மேஷாக், ஜெனின் செல்வராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.