ஆரல்வாய்மொழியில் முதியவா் சடலம் மீட்பு
ஆரல்வாய்மொழியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவா் சடலம் மீட்கப்பட்டது.
ஆரல்வாய்மொழியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவா் சடலம் மீட்கப்பட்டது.
ஆரல்வாய்மொழி ரயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள ஓடைக்கரை புதரில் முதியவா் சடலம் தூக்கில் தொங்குவதாக, போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆரல்வாய்மொழி காவல் ஆய்வாளா் மீனா, உதவி ஆய்வாளா் மாரிசெல்வம் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.