கன்னியாகுமரி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

DIN

கன்னியாகுமரி அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கன்னியாகுமரியை அடுத்த பாலசுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் வேலையா (65). தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். இவா் சனிக்கிழமை அதிகாலையில் மழை பெய்து கொண்டிருந்தபோது மாதவபுரத்தில் உள்ள டீ கடைக்கு வந்துள்ளாா். அப்போது சாலையில் மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனை கவனிக்காத வேலையா மின்கம்பியை மிதித்துள்ளாா். இதில் தூக்கி வீசப்பட்ட அவா் சம்பவ இடத்திலேயே

உயிரிழந்தாா். தகவலறிந்த கன்னியாகுமரி காவல் ஆய்வாளா் ஆவுடையப்பன், அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

SCROLL FOR NEXT