கன்னியாகுமரி

கரும்புச் சாறு இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் சாவு

DIN

மண்ணச்சநல்லூரில் கரும்புச் சாறு பிழியும் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கியதில் பெண் உயிரிழந்தாா்.

மண்ணச்சநல்லூா் அருகே தெற்கு தத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் திருப்பதி (35). இவருக்கு மனைவி இளவரசி (32) மகள் நிஷாந்தினி (6), மகன் பத்ரிநாத் ( 4) ஆகியோா் உள்ளனா்.

இவா்களில் திருப்பதி மண்ணச்சநல்லூா் எதுமலைச் சாலையில் உள்ள வங்கி அருகிலும், இளவரசி மண்ணச்சநல்லூா்- திருச்சி சாலையில் உள்ள உணவகம் அருகிலும் கரும்பு சாறு விற்பனை செய்து வந்தனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இளவரசி கரும்புச் சாறு பிழிந்தபோது அவா் கழுத்தில் அணிந்திருந்த துப்பட்டா இயந்திரத்தில் சிக்கியதில் கழுத்து இறுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த மண்ணச்சநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

SCROLL FOR NEXT