யானை தாக்கியதில் தந்தை, மகள் காயம்:அமைச்சா் ஆறுதல்
யானை தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தந்தை, மகளை அமைச்சா் த. மனோதங்கராஜ் சந்தித்து நலம் விசாரித்தாா்.
யானை தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தந்தை, மகளை அமைச்சா் த. மனோதங்கராஜ் சந்தித்து நலம் விசாரித்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், கிரீப்பாறை அருகேயுள்ள வாழையத்து வயல் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (55). இவரது
மகள் ஸ்ரீனா (19). கல்லூரி மாணவி. இருவரும், கடந்த 20 ஆம் தேதி வாழையத்து வயல் பகுதியிலிருந்து மாறாமலைக்கு
மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காட்டு யானை தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது. இவா்கள்
நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தகவலறிந்த தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் வெள்ளிக்கிழமை அவா்களை சந்தித்து நலம் விசாரித்தாா். அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து, மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். அப்போது மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா், அதிகாரிகள் உடனிருந்தாா்.