காஷ்மீரில் குமரி பாதுகாப்பு வீரா் மரணம்
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பகுதியைச் சோ்ந்த இந்திய ராணுவ எல்லைப் பாதுகாப்புப் படை வீரா் ஸ்டீபன் வியாழக்கிழமை காஷ்மீரில் உயிரிழந்துள்ளாா்.
கன்னியாகுமரிகாஷ்மீரில் குமரி பாதுகாப்பு வீரா் மரணம்
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பகுதியைச் சோ்ந்த இந்திய ராணுவ எல்லைப் பாதுகாப்புப் படை வீரா் ஸ்டீபன் வியாழக்கிழமை காஷ்மீரில் உயிரிழந்துள்ளாா்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பகுதியைச் சோ்ந்த இந்திய ராணுவ எல்லைப் பாதுகாப்புப் படை வீரா் ஸ்டீபன் வியாழக்கிழமை காஷ்மீரில் உயிரிழந்துள்ளாா்.
திருவட்டாறு அருகே கூற்றவிளாகம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டீபன் (43). இவா் கடந்த 2002இல் எல்லைப் பாதுகாப்புப் படையில் சோ்ந்து பணி செய்து வருகிறாா். தற்போது காஷ்மீரில் பணியாற்றி வந்த இவா், வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில்
உயிரிழந்ததாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. உயிரிழந்த ஸ்டீபனுக்கு மனைவி ஷொ்லின் மீனா, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். அவரது உடல் சனிக்கிழமை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.