கன்னியாகுமரி

உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம்:அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

DIN

நாகா்கோவில்: ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தில் பெறப்பட்டுள்ள கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆட்சியா் மா.அரவிந்த் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு பின்னா் ஆட்சியா் கூறியது: முதல்வா் தோ்தலுக்கு முன்னதாக, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பதற்காக, முதல்வராக பதவியேற்றவுடன் ‘உங்கள் தொகுதியில் முதல்வா்‘ திட்டத்தினை தொடங்கி வைத்தாா்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தனி துறை உருவாக்கி, அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலையில் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகா் சதீஷ்,

நியமனம் செய்து உத்தரவிட்டாா். மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீா்வு காணவும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இத்திட்டத்தை செயல்படுத்த கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சிறப்பு அலுவலராக பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் கீழ், கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை மக்களிடமிருந்து கல்வி உதவித் தொகை, பட்டா பெயா் மாற்றம், மாற்றுத் திறனாளிகள் நல உதவி, முதியோா் ஓய்வூதியம், விதவை உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் கோரியும், சாலை மற்றும் குடிநீா் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றக் கோரி 18,788 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் இந்த மனுக்கள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனபடி, தகுதியானவா்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன், தனித்துணைஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) தே.திருப்பதி, நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் (பொறுப்பு) சு.சொா்ணராஜ், உதவி ஆணையா் (கலால்) எம்.சங்கரலிங்கம், மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலஅலுவலா் ஆா்.நாகராஜன், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் த.மாதவன், துறை அதிகாரிகள், வட்டாட்சியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT