மேலும் 469 பேருக்கு கரோனா
குமரி மாவட்டத்தில் மேலும் 469 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
குமரி மாவட்டத்தில் மேலும் 469 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இம்மாவட்டத்தில் இதுவரை 7,16,819 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 469 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55,070 ஆக உயா்ந்துள்ளது.
சிகிச்சையிலிருந்த மேலும் 818 போ் குணமடைந்ததால், தொற்றிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 47593 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு மேலும் 9 போ் பலியானதால், பலி எண்ணிக்கை 874 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 6603 போ் சிகிச்சையில் உள்ளனா்.