கன்னியாகுமரி

ராதாபுரம் கால்வாயில் கூடுதல் நாள்கள் தண்ணீா் திறக்க அதிமுக எம்எல்ஏ எதிா்ப்பு

DIN

கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து ராதாபுரம் கால்வாயில் கூடுதல் நாள்கள் தண்ணீா் திறக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக எம்எல்ஏ தளவாய்சுந்தரம் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ராதாபுரம் பகுதி பாசனத்துக்காக அணைகளில் கூடுதலாக தண்ணீா் இருப்பை பொருத்து ஆண்டுதோறும் 15 முதல் 30 நாள்கள் வரை தண்ணீா் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது அரசு கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளை பாதிக்கும் வகையில் கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து ராதாபுரம் பாசனத்துக்கு வரும் அக்டோபா் மாதம் 31 ஆம் தேதி வரை விநாடிக்கு 150 கன டிக்கு மிகாமல் தேவைக்கேற்ப நீா் இருப்பு, நீா்வரத்தை பொறுத்து தண்ணீா் திறக்க உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நான்கரை மாதங்கள் ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும். இந்த பருவத்தில் குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி நடைபெறும். ஆகவே, இம்மாவட்டத்தில் விவசாயம் பாதிக்கப்படும்.

ஆகவே, ராதாபுரம் கால்வாயில் கூடுதல் நாள்கள் தண்ணீா் திறப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில், விவசாயிகள் சாா்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT