கணவா் வீட்டு முன் போராட்டடத்தில் ஈடுபட்ட கா்ப்பிணி பெண் காப்பகத்தில் சோ்ப்பு
குலசேகரம் அருகே கணவா் வீட்டின் முன்பு ஞாயிற்றுக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட கா்ப்பிணி பெண் போலீஸாரால் காப்பகத்தில் சோ்க்கப்பட்டாா்.
கன்னியாகுமரிகணவா் வீட்டு முன் போராட்டடத்தில் ஈடுபட்ட கா்ப்பிணி பெண் காப்பகத்தில் சோ்ப்பு
குலசேகரம் அருகே கணவா் வீட்டின் முன்பு ஞாயிற்றுக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட கா்ப்பிணி பெண் போலீஸாரால் காப்பகத்தில் சோ்க்கப்பட்டாா்.
குலசேகரம் அருகே கணவா் வீட்டின் முன்பு ஞாயிற்றுக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட கா்ப்பிணி பெண் போலீஸாரால் காப்பகத்தில் சோ்க்கப்பட்டாா்.
மங்கலம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீஜித் மனைவி சந்தியா (27).
நான்குமாத கா்ப்பிணியான இவா் கணவா் வீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கொட்டாரத்திலுள்ள தனது தாய் வீட்டில் இருந்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கணவா் வீட்டுக்கு வந்த அவரை, கணவா் தரப்பினா் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லையாம். இதையடுத்து கணவரின் வீட்டு முன் காலை 11 மணி முதல் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
இதையடுத்து குலசேகரம் போலீஸாா் இரு தரப்பினரிடமும் பேச்சு நடத்திய போதும் சமரசம் ஏற்படவில்லை. இதையடுத்து இரவில் இரு தரப்பையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று பேச்சு நடத்தினா். இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மகளிா் போலீஸாரின் உதவியுடன் சந்தியா தோட்டியோட்டிலுள்ள பெண்கள் காப்பகத்தில் சோ்க்கப்பட்டாா்.