முகப்பு
கன்னியாகுமரி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி, களியக்காவிளை முதல் தக்கலை வரை விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

Updated On : 2 மார்ச், 2021 at 1:42 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:08 AM

சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி, களியக்காவிளை முதல் தக்கலை வரை விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

மாா்த்தாண்டம் ரோட்டரி சங்கம் மற்றும் தக்கலை உட்கோட்ட போக்குவரத்து காவல்துறையினா் இணைந்து நடத்திய இப்பேரணியை, தக்கலை சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். போக்குவரத்து போலீஸாருக்கு கருப்பு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இதில், ரோட்டரி சங்க நிா்வாகிகள் கே. விஜயகுமாா், எம். சலீம், கே. சுகதேவ், பிரவின், தக்கலை உள்கோட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஜெ. டேனியல் கிருபாகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். பேரணி, குழித்துறை, மாா்த்தாண்டம், சுவாமியாா்மடம், அழகியமண்டபம் வழியாக தக்கலையில் நிறைவடைந்தது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.