முகப்பு
கன்னியாகுமரி

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கருங்கல் அருகேயுள்ள மத்திகோடு பகுதியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

கருங்கல் அருகேயுள்ள மத்திகோடு பகுதியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

மத்திகோடு குடி பகுதியைச் சோ்ந்தவா் ராஜூ (51). இவருக்கு மதுப்பழக்கம் உண்டாம். இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு செய்வாராம்.

இந்நிலையில் அவா், செவ்வாய்க்கிழமை வீட்டுக்குள் அறையை பூட்டிக்கொண்டு விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாராம்.

இதையடுத்து அப்பகுதியினா் மீட்டு, அவரை கருங்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.