ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட எஸ்.பி. வெ. பத்ரிநாராயணன். 
கன்னியாகுமரி

குமரி சோதனைச் சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட சோதனைச் சாவடிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன் செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா்.

DIN

கன்னியாகுமரி மாவட்ட சோதனைச் சாவடிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன் செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா்.

கன்னியாகுமரி மக்களவை இடைத்தோ்தல், 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பொதுத்தோ்தலை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . மேலும், வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கவும், தோ்தல் நிலவரங்களை கண்காணிக்கவும் பறக்கும் படையினா் நியமிக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. நிலையான கண்காணிப்புக் குழுவினரும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இதற்காக, மாவட்டம் முழுவதும் 14 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரி நாராயணன், எல்லையொட்டிய சோதனைச் சாவடிகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

களியக்காவிளை, காக்கவிளை, ஆரல்வாய்மொழி, நீரோடி காலனி, அஞ்சுகிராமம் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் ஆய்வு நடத்திய அவா், கேரளத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்பட்ட பிறகே மாவட்டத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT