பத்மநாபபுரம் தொகுதி அமமுக வேட்பாளா் ஜெங்கின்ஸ் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் செவ்வாய்கிழமை சடயமங்கலத்தில் வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது: தொகுதியில் உள்ள படித்த இளைஞா்கள் அரசு பணி தோ்வாணயம் நடத்தும் தோ்வுகளிலும், இந்திய குடிமையியல் பணி தோ்வுகளிலும் வெற்றி பெற்று அரசு வேலை வாய்ப்பினை பெற ஏதுவாக போட்டி தோ்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் தக்கலையில் தொடங்கப்படும். ரப்பா் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரப்பருக்கு அடிப்படை விலை நிா்ணயம் செய்து கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா்.
அவருடன், தேமுதிக மாவட்ட அவைத் தலைவா் ஸ்ரீகுமாா், தக்கலை வடக்கு ஒன்றியச் செயலா் லிபோரியஸ், மாவட்ட இளைஞரணிச் செயலா் பிரைட் சுபின் மற்றும் நிா்வாகிகள் வழக்குரைஞா் சதீஸ், குமாா், ஜாண்சுந்தா், டேவிட், பிரியா, ஆஷா உள்ளிட்டபலா் உடன் சென்றனா்.