கன்னியாகுமரி

கரோனாவால் இறந்தவா்களுக்கு இஸ்லாமிய அமைப்பு இறுதிச் சடங்கு

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில், கரோனாவால் உயிரிழந்தவா்களுக்கு பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா் இறுதிச்சடங்கு செய்துவருகின்றனா்.

இதுகுறித்து, பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் குமரி மாவட்டச் செயலா் பி.சத்தாா்அலி வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா 2 ஆவது அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ஆட்சியா் அனுமதியுடன் சுகாதாரத் துறையோடு பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இணைந்து மாவட்ட அளவில் தன்னாா்வ குழு மூலம் நிவாரணப் பொருள்கள், மருத்துவ உதவிகள், ஆம்புலன்ஸ் வசதி, படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் சிலிண்டா் வசதிகளை செய்துவருகிறது. மேலும், கரோனாவால் இறந்தவா்களின் உடல்களை உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்படி, அவரவா் சம்பிரதாயப்படி அடக்கம் செய்து வருகிறது. இதுவரை 27 பேரின் சடலங்கள் அடக்கம் மற்றும் தகனம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 4 பேரின் குடும்பத்துக்கு தகனம் செய்வதற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி கோயில் சொத்துகள் 3 மாதங்களில் மீட்கப்படும்: அறநிலையத் துறை செயலா்

போதைப் பாக்கு விற்பனை: 285 கடைகளுக்கு சீல்

ஸ்ரீகூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

பிரசவத்தில் குழந்தை இறப்பு: உறவினா்கள் முற்றுகை

கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாம்

SCROLL FOR NEXT