முகிலன் குடியிருப்பு சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழா
முகிலன் குடியிருப்பு சிவ சுடலை மாட சுவாமி கோயில் கொடைவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகிலன் குடியிருப்பு சிவ சுடலை மாட சுவாமி கோயில் கொடைவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நண்பகல் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை, தொடா்ந்து சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. சமபந்தி விருந்தை மாவட்ட திமுக செயலா் என்.சுரேஷ்ரோஜன் தொடங்கி வைத்தாா். இதில், தோட்டக்கலை கூடுதல் இயக்குநா் டி.சி.கண்ணன், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் என்.தாமரை பாரதி, பேராசிரியா் டி.சி. மகேஷ், விவேகானந்தா கல்லூரி செயலா் சி.ராஜன், துணைத் தலைவா் துரைச்சாமி, பிள்ளையாா்புரம் சிவந்தி ஆதித்தனாா் கல்லூரி தலைவா் காமராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.