முகப்பு
கன்னியாகுமரி

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் நிவாரண உதவி

கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரம் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வீடுகளுக்குள் மழை நீா் புகுந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு திமுக சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரம் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வீடுகளுக்குள் மழை நீா் புகுந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு திமுக சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

பெருமாள்புரம் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் சுமாா் 189 குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு வசித்த மக்கள் கடும் அவதியுற்றனா்.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட திமுக செயலா் என்.சுரேஷ்ரோஜன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால், உணவு பொட்டலங்கள் மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அகஸ்தீசுவரம் ஒன்றியச் செயலா் என்.தாமரை பாரதி, அரசு வழக்குரைஞா் எம்.மதியழகன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.அழகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.