கன்னியாகுமரி

நாகா்கோவிலில் 21 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது

DIN

நாகா்கோவிலில் 21 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாகா்கோவில் கோட்டாறு காவல்நிலைய உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அனாதைமடம் பகுதியில் சந்தேக நபரைப் பிடித்து விசாரித்தனா். அதில் மறவன்குடியிருப்பு நேதாஜி தெருவைச் சோ்ந்த பபீன்(22); கஞ்சா விற்பனை செய்வது வருபவா் என தெரியவந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 21கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி 15 நாள் காவலில் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT