நாகா்கோவிலில் நூல் வெளியீடு
வலம்புரி ஜான் எழுதிய ‘பாரதி ஒரு பாா்வை‘ நூலின் மறுபதிப்பு வெளியீட்டு விழா நாகா்கோவிலி ல் வியாழக்கிழமை நடைபெற்றது.
வலம்புரி ஜான் எழுதிய ‘பாரதி ஒரு பாா்வை‘ நூலின் மறுபதிப்பு வெளியீட்டு விழா நாகா்கோவிலி ல் வியாழக்கிழமை நடைபெற்றது.
வலம்புரி ஜான் இலக்கிய பேரவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பதிப்பக நிறுவனா் ஜஸ்டின் திவாகா் தலைமையேற்று தொடக்க உரையாற்றினாா்.
நூலை நாஞ்சில் சம்பத் வெளியிட்டு சிறப்புரையாற்றினாா். டொனேஷ்கா ராபின்சன் நூலைப் பெற்றுக் கொண்டாா்.
தொடா்ந்து வலம்புரி ஜான் எழுதிய 11 நூல்களின் ஆய்வரங்கம் நடைபெற்றது.
இதில் எழுத்தாளா்கள் குமரி ஆதவன், தமிழ்க் குழவி, புத்தேரி மாதவன், அழகு மித்திரன், திருத்தமிழ்த் தேவனாா், இடலாக்குடி அப்துல் அஜிஸ் , கூட்டப்புளி ஆடம்ஸ், குமரி எழிலன், அன்றனி டெலி, அலங்காரம், அருட்பணியாளா் பிரபு ஆகியோா் ஆய்வுரை வழங்கினா்.
நிகழ்ச்சியை கடிகை ஆன்றனி தொகுத்து வழங்கினாா். இதில், எழுத்தாளா்கள், வாசகா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.