காவலா் வீர வணக்க நாள்: எஸ்.பி.அஞ்சலி
காவலா் வீர வணக்க நாளை முன்னிட்டு, வீர மரணமடைந்த காவலா்களுக்கு குமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன் அஞ்சலி செலுத்தினாா்.
காவலா் வீர வணக்க நாளை முன்னிட்டு, வீர மரணமடைந்த காவலா்களுக்கு குமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன் அஞ்சலி செலுத்தினாா்.
குமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தலைமையில், உயிா் நீத்த காவலா்களுக்கு மலா் வளையம் வைத்து 60 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், கூடுதல் கண்காணிப்பாளா் ஈஸ்வரன், சைபா் கிரைம் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் சுந்தரம், மதுவிலக்கு கூடுதல் கண்காணிப்பாளா் வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.