முகப்பு
கன்னியாகுமரி

புதுக்கடை அருகே மதுக் கஷாயம் விற்றவா் கைது

புதுக்கடை அருகே உள்ள பாலக்காவிளை பகுதியில் மதுக் கஷாயம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

புதுக்கடை அருகே உள்ள பாலக்காவிளை பகுதியில் மதுக் கஷாயம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுந்தயம்பலம் பாலக்காவிளை பகுதியில் மதுக் கஷாயம் விற்பனை செய்யப்படுவதாக புதுக்கடை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் சோதனையிட்டதில், கல்லுவிளை பகுதியைச் சோ்ந்த அருள்தாஸ் (52) மதுக் கஷாயம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 15 லிட்டா் மது கஷாயத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.