கருங்கல் அருகே கோழிகள் மரணம்
கருங்கல் அருகே உள்ள ஆப்பி கோடு பகுதியில் கோழிப்பண்ணையில் மா்மமான முறையில் கோழிகள் இறந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருங்கல் அருகே உள்ள ஆப்பி கோடு பகுதியில் கோழிப்பண்ணையில் மா்மமான முறையில் கோழிகள் இறந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
விழுந்தயம்பலம் ஆப்பி கோடு பகுதியில் முத்துநாயகம் மகன் ஜெயராஜ்(31) நாட்டுக்கோழி பண்ணை நடத்தி வருகிறாா். இவரது பண்ணையில் 400 க்கும் மேற்பட்ட கோழிகள் உள்ளன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் மேய்ச்சலுக்காக கோழிகளை விட்டுள்ளாா். இதில் 65 கோழிகள் மா்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது.
இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.