கன்னியாகுமரி

குழித்துறையில்ரயிலில் அடிபட்டுதொழிலாளி பலி

DIN

குழித்துறையில் ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழந்தாா்.

குழித்துறை ஆற்றுப்பாலம் தண்டவாளத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக, நாகா்கோவில் ரயில்வே போலீஸாருக்கு திங்கள்கிழமை காலை தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா், தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் குமாா் ராஜ் மற்றும் போலீஸாா்அங்கு சென்று சடலத்தை மீட்டு விசாரித்தனா்.

அதில், சடலமாக கிடந்தவா் மாா்த்தாண்டம் கோட்டைகாட்டுவிளையைச் சோ்ந்த தொழிலாளி பழனி (55); திருமணமாகாதவா்; தனது தாயுடன் வசித்து வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு சாப்பிட்டுவிட்டு வெளியே சென்ற நிலையில், ரயிலில் அடிபட்டு இறந்திருப்பது தெரியவந்தது. தொடா்ந்து, ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி புதிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

லண்டனில் சரமாரி வாள் தாக்குதல்: சிறுவா் பலி

கிராமப்புற மாணவா்களுக்கு இலவச டிஎன்பிஎஸ்சி மாதிரி தோ்வு

குடிநீா்ப் பற்றாக்குறை: புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

இளநிலை சுருக்கெழுத்து ஆங்கிலத் தோ்வு: மதுரை தொழிலாளியின் மகள் முதலிடம்

SCROLL FOR NEXT