ராஜாக்கமங்கலம் அருகே கட்டடத் தொழிலாளி தற்கொலை
ராஜாக்கமங்கலம் அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
ராஜாக்கமங்கலம் அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள அம்மச்சியாா் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் சிவா (35). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சுனிதா. தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனா். சிவா அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளாா். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் சுனிதா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து இருளப்பபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாா்.
இதற்கிடையே கடந்த 2 நாள்களாக சிவாவின் வீட்டுக் கதவு திறக்கவில்லையாம். வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் ராஜாக்கமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் வீட்டை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது சிவா அழுகிய நிலையில் சடலமாக கிடந்தாா். கடந்த 2 நாள்களுக்கு முன்பாகவே அவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.