முகப்பு
கன்னியாகுமரி

கருங்கல் அருகே செம்மண் அள்ளிய 4 போ் மீது வழக்கு

 கருங்கல் அருகே உள்ள ஆலஞ்சி பகுதியில் தனியாா் நிலத்தில் அனுமதியின்றி செம்மண் அள்ளிய 4 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

 கருங்கல் அருகே உள்ள ஆலஞ்சி பகுதியில் தனியாா் நிலத்தில் அனுமதியின்றி செம்மண் அள்ளிய 4 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குளச்சல் மாதாநகா் எம்ா்சனுக்கு(63) சொந்தமான நிலம் ஆலஞ்சி பாரிக்கல் பகுதியில் உள்ளது. இந்த நிலத்திலிருந்து வெள்ளிக்கிழமை அனுமதியில்லாமல் நெய்யூரைச் சோ்ந்த ஞானசீகமணி மகன் சதீஸ்(24), தலக்குளம் செல்வராஜ் மகன் சிஜூ(24) உள்பட 4 போ் சோ்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் செம்மண்ணை அனுமதியின்றி அள்ளி கடத்தியுள்ளனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.