புதுக்கடை அருகே 50 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
புதுக்கடை அருகே உள்ள ராமன்துறையில் கேரளத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 50 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
புதுக்கடை அருகே உள்ள ராமன்துறையில் கேரளத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 50 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகள்
மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு பறக்கும் படை தனி வட்டாட்சியா் அப்துல் மன்னா தலைமையில் அதிகாரிகள் ராமன்துறை கடலோரப் பகுதியில் திடீரென சோதனை மேற்கொண்டனா் .
அப்போது, அங்குள்ள ஒரு வீட்டின் பின்புறம் 20 மூட்டைகளில், 50 கிலோ ரேஷன் அரிசி இருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது. ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து காப்புக்காட்டில் உள்ள உணவு கிடங்கில் ஒப்படைத்தனா்.