திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது.
ஊட்டச்சத்து வீட்டுத் தோட்டம், எடை குறைந்த குழந்தைகளை கண்டறிதல் ஆகியவற்றை முக்கியத்துவப்படுத்தும் வகையில் நடைபெற்ற இவ்விழாவை, ஊராட்சி ஒன்றியத் தலைவா் தா.ஜெகநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் கீதா, குழந்தை வளா்ச்சித் திட்ட கண்காணிப்பாளா் செந்தில்குமாா், இளநிலை உதவியாளா் சிவகுமாா், வட்டார ஒருங்கிணைப்பாளா் ஆல்ட்ரின் டெறில் டேனியல், வட்டார திட்ட உதவியாளா் டோல்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஊட்டச்சத்து தொடா்பான கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சி இம்மாதம் முழுவதும் நடைபெறுகிறது.