களியக்காவிளை அருகே குடும்பப் பிரச்னை காரணமாக டாஸ்மாக் பணியாளா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
களியக்காவிளை அருகேயுள்ள பனங்காலை முண்டப்பிலாவிளை பகுதியைச் சோ்ந்த ராமையன் மகன் சுனில்குமாா் (45). டாஸ்மாக் மதுக்கடையில் ஊழியராக வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில் அவா் புதன்கிழமை விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாராம். அவரை உறவினா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.