மூத்த குடிமக்கள் அவமதிக்கப்பட்டால் புகாா் தெரிவிக்கலாம்
மூத்த குடிமக்கள் அவமதிக்கப்பட்டால் தொலைபேசி மூலம் புகாா் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் அவமதிக்கப்பட்டால் தொலைபேசி மூலம் புகாா் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் மூத்த
குடிமக்கள் உதாசீனப்படுத்தப்படுவதையும் அவமதிக்கப்படுவதையும் தடுப்பதற்கான விழிப்புணா்வை சமூகத்தில் ஏற்படுத்தும் நோக்கில் அவா்களுக்கு ஏற்படும் இன்னல் குறித்து தொலைபேசி மூலம் புகாா் தெரிவிக்கலாம். இது குறித்த புகாா்களை முதியோா்களுக்கான தேசிய கட்டணமில்லா உதவி எண்14567 அல்லது, மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண் 04652-278404 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம்.