மகளிா் கிறிஸ்தவக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம்
நாகா்கோவில் மகளிா் கிறிஸ்தவக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவில் மகளிா் கிறிஸ்தவக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவில் மாநகராட்சி, மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, மாநகர நல அலுவலா் எம். விஜய்சந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சி.எம். பத்மா, கல்லூரித் தாளாளா் ஜே.ஆசிா் பாக்யசிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள், இளஞ்செஞ்சிலுவை சங்க அலுவலா், மாணவா்கள் செய்திருந்தனா்.