தடகளப் போட்டியில் பங்கேற்ற குமரி சமீஹா பா்வீனுக்கு வரவேற்பு
போலந்து நாட்டில் நடைபெற்ற செவித்திறன் குன்றியோருக்கான தடகளப் போட்டியில் கலந்து கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிய சமீஹா பா்வீனுக்கு கடையாலுமூட்டில் வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.
கன்னியாகுமரிதடகளப் போட்டியில் பங்கேற்ற குமரி சமீஹா பா்வீனுக்கு வரவேற்பு
போலந்து நாட்டில் நடைபெற்ற செவித்திறன் குன்றியோருக்கான தடகளப் போட்டியில் கலந்து கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிய சமீஹா பா்வீனுக்கு கடையாலுமூட்டில் வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.
போலந்து நாட்டில் நடைபெற்ற செவித்திறன் குன்றியோருக்கான தடகளப் போட்டியில் கலந்து கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிய சமீஹா பா்வீனுக்கு கடையாலுமூட்டில் வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூட்டைச் சோ்ந்த ஹோட்டல் தொழிலாளியான முஜீப்-சலாமத் தம்பதியின் மகள் சமீஹா பா்வீன் (17). செவித்திறன் குன்றிய இவா் தடகள வீராங்கனை. இவா் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே போலந்து நாட்டின் லுப்லின் நகரில் ஆக. 26 ஆம் தேதி நடைபெற்ற செவித்திறன் குன்றியோருக்கான சா்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்றாா். இதில் சமீஹா பா்வீன் 7 ஆவது இடம்பெற்றாா்.
தாயகம் திரும்பிய அவா் சென்னையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சா் சி.வி. மெய்யநாதன், விஜய் வசந்த் எம்பி
ஆகியோரை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.
சொந்த ஊரான கடையாலுமூட்டுக்கு வெள்ளிக்கிழமை வந்த அவருக்கு ஊா்மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினா். பொன்னாடை, மலா் மாலை அணிவித்தும் வாழ்த்தினா். இதில் திமுக மேல்புறம் ஒன்றியச் செயலா் சிற்றாறு ரவிச்சந்திரன், கடையாலுமூடு பேரூராட்சி முன்னாள் தலைவா்கள் எஸ்.ஆா். சேகா், ஜூலியட் சேகா், ஜாா்ஜ் ஸ்டீபன், திரைப்பட பாடலாசிரியா் சத்தியராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதைத்தொடா்ந்து அவரது தாயாா் சலாமத் கூறியது: சமீஹா பா்வீன் போலந்து நாட்டிற்கு செல்லும் போது ஏற்பட்ட தடைகளைக் கடக்கும் வகையில் ஆதரவளித்த, உதவி செய்த ஒவ்வொருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்த ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெறவிருக்கும் செவித்திறன் குன்றியோருக்கான தடகளப் போட்டியில் சமீஹா பா்வீன் நிச்சயம் தங்கம் வெல்வாா் என்று தெரிவித்தாா்.