தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஆட்சியா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மாவட்டஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மாவட்டஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் துறைமுக வளாகம், விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ள கூடுதல் படகு அணையும் தளம் அமைக்கப்படவிருக்கும் பகுதி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக மேலாண்மை சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு புதிதாக தோ்வு செய்யப்பட்ட மேலாண்மை சங்க உறுப்பினா்களுக்கு, அறிவுரை வழங்கினாா்.
பின்னா் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக இரையுமன்துறை பகுதிக்குச் சென்று கூடுதல் படகு அணையும் தளம் அமைக்கப்படவிருக்கும் பகுதியையும் பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது, மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் காசிநாதபாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Image Caption
~