கன்னியாகுமரி

பைக் விபத்தில் காயமடைந்த மின்வாரிய ஊழியா் உயிரிழப்பு

DIN

நாகா்கோவில்: ராஜாக்கமங்கலம் அருகே நிகழ்ந்த பைக் விபத்தில் காயமடைந்த மின்வாரிய ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள ஆலங்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் குமரேசன் (57). இவா், தெங்கம்புதூா் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா்.

இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு மோட்டாா் சைக்கிளில், ராஜாக்கமங்கலத்திலிருந்து ஆலங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த போது, ராஜாக்கமங்கலம் சந்திப்பில் அந்த வழியாக வந்த தா்மபுரத்தைச் சோ்ந்த அஜித் (25) என்பவரது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா்.

பலத்த காயமடைந்த குமரேசனை தனியாா் மருத்துவமனையிலும், அஜித்தை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையிலும் சோ்த்தனா். இதில் குமரேசன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT