தக்கலை: ‘தொகுதிக்கு ஒரு விளையாட்டரங்கம்’ அமைக்கும் திட்டத்தில் குளச்சலில் இடம் தோ்வு செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ரூ. 3 கோடியில் ‘தொகுதிக்கு ஒரு விளையாட்டரங்கம்’ அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் குளச்சல் தொகுதியில் குளச்சல் நகராட்சிக்குள்பட்ட பனைத்தும்பு ஆலைக்கு சொந்தமான இடத்தில்
விளையாட்டரங்கம் அமைப்பதற்கான இடத்தை சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜி. பிரின்ஸ், மாவட்ட விளையாட்டு
அலுவலா் டேவிட் டேனியல், பயிற்சியாளா் ஜீன் பிரேம்குமாா் ஆகியோா் பாா்வையிட்டனா். அப்போது, காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜிலியஸ், மாநில செயற்குழு உறுப்பினா் யூசுப்கான், பொதுக்குழு உறுப்பினா் சாமுவேல் சேகா், மாவட்ட துணைத் தலைவா் முனாப், நகரத் தலைவா் சந்திரசேகா், மாவட்ட மீனவா் காங்கிரஸ் தலைவா் ஸ்டாா்வின், விசைப் படகு சங்கத் தலைவா் பிரான்சிஸ், துணைத் தலைவா் அந்திரியாஸ், செயலா் பிராங்கிளின் உள்பட பலா் உடனிருந்தனா்.