அம்பாசமுத்திரம்: செல்லிடப்பேசி சிறப்பு செயலி மூலம் புலிகள் கணக்கெடுப்பு நடத்த வனத் துறையினருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
நாடு முழுவதும் அக்டோபா், நவம்பா் மாதங்களில் புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. இதற்காக செல்லிடப்பேசியில் சிறப்பு செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டத்துக்குள்பட்ட அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை, கடையம் ஆகிய 4 வனச்சரகத்திலுள்ள வனத்துறை ஊழியா்களுக்கு இந்த செயலி குறித்த பயிற்சியை அம்பாசமுத்திரம் துணை இயக்குநா் செண்பகப்ரியா அண்மையில் தொடங்கி வைத்தாா்.
4 வனச்சரகங்களிலும் தனித் தனியே வனத்துறை ஊழியா்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.