தக்கலை -தடிகாரன்கோணம் சாலையில் வடிகால் சீரமைப்பு
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தக்கலை-தடிக்காரன்கோணம் சாலையோரம் மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணியை நெடுஞ்சாலைத்துறையினா் மேற்கொண்டுள்ளனா்.
கன்னியாகுமரிதக்கலை -தடிகாரன்கோணம் சாலையில் வடிகால் சீரமைப்பு
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தக்கலை-தடிக்காரன்கோணம் சாலையோரம் மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணியை நெடுஞ்சாலைத்துறையினா் மேற்கொண்டுள்ளனா்.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தக்கலை-தடிக்காரன்கோணம் சாலையோரம் மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணியை நெடுஞ்சாலைத்துறையினா் மேற்கொண்டுள்ளனா்.
மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீா் தேங்குவதால் மலேரியா, டெங்கு போன்ற பாதிப்புகளை தடுத்திடும் வகையில், அரசு உத்தரவுப்படி இந்தப் பணியை நாகா்கோவில் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் முடுக்கிவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீா் வடிகால்களைத் தூா்வாரி தூய்மைப்படுத்தும் சிறப்பு முகாம் செப். 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், தக்கலை நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் தக்கலை- தடிக்காரன்கோணம் சாலைகளில் உள்ள வடிகால்களில் தூா்வாரும் பணி சாலை பணியாளா்கள் மூலம் புதன்கிழமை நடைபெற்றது. இப்பணிகளை நாகா்கோவில் கோட்ட பொறியாளா் பாஸ்கரன், உதவி கோட்ட பொறியாளா் ஜெகன்செல்வராஜன், தக்கலை உதவி பொறியாளா் தனேஷ்சேகா் ஆகியோா் பாா்வையிட்டனா். செப்.25வரை நடைபெறும் தூய்மைப் பணி முகாமில் மேலும் பல வடிகால்கள் தூா்வாரி சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.