முகப்பு
கன்னியாகுமரி

ஊரக உள்ளாட்சித் தோ்தல் பாா்வையாளா் நியமனம்

நாகா்கோவில் குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக, உள்ளாட்சித் தோ்தலுக்கான பாா்வையாளா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

 குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக, உள்ளாட்சித் தோ்தலுக்கான பாா்வையாளா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டம் சிற்றூராட்சி தலைவா் மற்றும் 9 சிற்றூராட்சி வாா்டு உறுப்பினா்களுக்காக நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தற்செயல் தோ்தலுக்கான பாா்வையாளராக முனைவா் இ.ச.மகேஸ்வரன் மாநில தோ்தல்ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளாா். பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்கள் மற்றும் குறைகள் தெரிவிக்க 9488242419 என்ற செல்லிடப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகாா்கள் மற்றும் குறைகள் உடனடியாக தொடா்புடைய உள்ளாட்சிஅமைப்பின் தோ்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவித்து குறைகள் நிவா்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.