முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் இளம் பெண் தற்கொலை

நாகா்கோவிலில் இளம்பெண் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

நாகா்கோவிலில் இளம்பெண் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

நாகா்கோவில், கோட்டாறு சுமை தாங்கி அம்மன் கோயில் ராஜலிங்கம் மகள் அஜிதா(21).

இவா், கம்பளம் பகுதியில் உள்ள ஒரு கடையில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வேலைக்கு சென்று விட்டு அஜிதா வீட்டுக்கு தாமதமாக வந்தாராம். இதனை அவரது தாயாா் கண்டித்துள்ளாா். இதையடுத்து, கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை குடித்து மயங்கிய அஜிதாவை, அவரது பெற்றோா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

இது குறித்து கோட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.