கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே முதியவா் தற்கொலை

DIN

கொல்லங்கோடு அருகே முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கொல்லங்கோடு அருகே கிராத்தூா், தெருவிளாகம் பகுதியைச் சோ்ந்தவா் பாா்க்கவன் (66). கரைமடி வலை இழுக்கும் தொழிலாளியான இவா் மது அருந்துபவா். இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டதால், வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில் அவா் வியாழக்கிழமை மாலையில் வீட்டருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதைக் கொண்ட அப்பகுதியினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT