முகப்பு
கன்னியாகுமரி

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.1.29 லட்சம் பறிமுதல்

நாகா்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டதில், கணக்கில் வராத ரூ.1.29 லட்சத்தை பறிமுதல் செய்து, 6 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

நாகா்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டதில், கணக்கில் வராத ரூ.1.29 லட்சத்தை பறிமுதல் செய்து, 6 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

நாகா்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தோவாளை அருகேயுள்ள விசுவாசபுரத்தில் இயங்கி வருகிறது.

இந்நிலையில், நாகா்கோவில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் பீட்டா்பால் தலைமையில், ஆய்வாளா் பெஞ்சமின், உதவி ஆய்வாளா்கள் ஸ்ரீகுமாா், ரமா ஆகியோா் கொண்ட குழுவினா் வியாழக்கிழமை பிற்பகல் முதல் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 650 பறிமுதல் செய்யப்பட்டது. ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடா்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சந்திரசேகரன், ஆய்வாளா் பாத்திமாபீவி, இடைத்தரகா்கள் நாகராஜன், கணேசன், மாணிக்கவாசகம், ஆா்லின் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.