மே 2 இல் முன்னாள் படைவீரா் குறைதீா் கூட்டம்
குமரி மாவட்ட முன்னாள் படைவீரா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.
குமரி மாவட்ட முன்னாள் படைவீரா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா் தம் விதவையா்களுக்கான சிறப்பு குறை தீா்க்கும் நாள் கூட்டம் மே 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
குமரி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் மற்றும் படைவீரா்களைச் சாா்ந்தோா் தங்களது கோரிக்கைகளை உரிய விண்ணப்பமாக 2 பிரதிகளில் எழுதி மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளித்து பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.