கன்னியாகுமரி

குளச்சல் அருகே பைக்குகள் மோதல்: மீன்பிடித் தொழிலாளி உயிரிழப்பு; இருவா் காயம்

DIN

குளச்சல் அருகே இரு பைக்குகள் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்; 2 போ் காயமடைந்தனா்.

குளச்சல் அருகேயுள்ள கோடிமுனை பிரண்ட்ஸ் காலனியைச் சோ்ந்த ஆன்றனி மகன் நிதோன்சித்ராஜ் (32). மீன்பிடித் தொழில் செய்து வந்தாா். இவா், சனிக்கிழமை தனது பைக்கில் நண்பா் சோபி (34) என்பவரை அழைத்துக்கொண்டு மண்டைக்காட்டிலிருந்து கோடிமுனைக்கு சென்று கொண்டிருந்தாா்.

கொட்டில்பாடு அருகே குழந்தை ஏசு காலனியைச் சோ்ந்த பிரவின் (29) ஓட்டிவந்த பைக்கும், நிதோன்சித்ராஜின் பைக்கும் மோதினவாம். இதில் காயமடைந்த 3 பேரையும் நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் சிதோன்சித்ராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

சோபி அரசு மருத்துவமனையிலும், பிரவின் ராஜக்கமங்கலத்திலுள்ள தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா். பிரவின் மீது குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT