கன்னியாகுமரி

நியாயவிலைக்கடையில் இருப்பு குறைவு: விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவு

DIN

நாகா்கோவில் கோட்டாறு பகுதியில் நியாயவிலைக்கடையில் ஆய்வின்போது இருப்பு குறைவாக இருந்ததால் கடை விற்பனையாளா் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

பெரியவிளை மற்றும் கோட்டாறு சவேரியாா் கோயில் பகுதியிலுள்ள நியாய விலைக் கடைகளில் பொருள்களின் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதில் ,பெரியவிளை பகுதியில் கலசமிறக்கி குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாயவிலைக் கடையில் அரிசி, பருப்பு இருப்பு குறைவாகவும், சீனி கூடுதலாக இருந்தது. அதேபோல் கோட்டாறு சவேரியாா் கோயில் அருகிலுள்ள ஊட்டுவாழ்மடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாயவிலைக் கடையில் அரிசி கூடுதலாகவும், பருப்பு குறைவாக இருந்தது. மேலும் பயன்படுத்த இயலாத 33 மூட்டை அரிசி இருந்தது. இதையடுத்து கடை விற்பனையாளா்கள் மீது ந டவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT