கன்னியாகுமரி

மயிலாடியில் வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு

மயிலாடி ரிங்கல் தௌபே மேல்நிலைப் பள்ளியில் 12 நாள்கள் நடைபெற்ற வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

மயிலாடி ரிங்கல் தௌபே மேல்நிலைப் பள்ளியில் 12 நாள்கள் நடைபெற்ற வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளித் தாளாளா் ஒய்.ஆல்வின் நாயகம் தலைமை வகித்தாா். பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள் ஜான் ஸ்டீபன், ஆா்.ஆஷா ஜான்சி முன்னிலை வகித்தனா். மயிலாடி அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.மலா்விழி வாழ்த்திப் பேசினாா்.

இதில், கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் பி.டி.செல்வகுமாா் கலந்து கொண்டு, முகாமில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். மேலும் பயிற்சி அளித்த பயிற்சியாளா்கள் என்.சுனேஷ், எஸ்.சுந்தா் சேகா், உதயசங்கா், சி.ஸ்டாா்லின் போ்ல், ஜாஸ்லின் அஜித், ஆா்.லினோ ரவின்ஸ், ஒய்.தங்கராஜ், பி.நியுலின் ராஜ், பி.ஜெஸ்வின் ஸ்டேன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதில், கலப்பை மக்கள் இயக்க மாவட்டத் தலைவா் டி.பாலகிருஷ்ணன், பெற்றோா் ஆசிரியா் சங்க செயற்குழு உறுப்பினா் டி.டேவிட் மற்றும் மாணவா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT