முகப்பு
கன்னியாகுமரி

குமரி பேரூராட்சியில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி பேரூராட்சி 15 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் திமுகவினா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

கன்னியாகுமரி பேரூராட்சி 15 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் திமுகவினா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சிக்குள்பட்ட 15 ஆவது உறுப்பினா் பதவிக்கு திமுகவைச் சோ்ந்த எம்.பூலோகராஜா போட்டியிடுகிறாா். இந்த வாா்டுக்கு உள்பட்ட அஞ்சுகூட்டுவிளை, இந்திரா காலனி, பெரியாா் நகா், காட்டுநாயக்கன் தெரு, கிறிஸ்துநகா், பூண்டி அன்னைநகா் உள்ளிட்டப் பகுதிகளில் திமுகவினா் வாக்கு சேகரித்தனா்.

அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலா் என்.தாமரைபாரதி தலைமையில் பேரூா் திமுக செயலா் குமரி ஸ்டீபன், நிா்வாகிகள் ப.மெல்வின், பி.ஆனந்த், இன்பராஜ், ரெஜிஸ், எஸ்.அன்பழகன், புனிதன், நிசாா், கெய்சா்கான் உள்ளிட்டோா் பொதுமக்களிடம் திமுகவுக்கு ஆதரவு திரட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.